Sunday, December 31, 2006
மீண்டும் ஞானி – 6. கடவுள்
மீண்டும் ஞானி – 6. கடவுள்
இன்னொரு மாணவன் எழுந்து கேள்வி கேட்டான். எனக்கு ஒரு சந்தோஷம். நான் இதே கேள்வியை கேட்டிருந்தால் போடா முட்டாள். நீ மனிதன் என்று சொல்லிவிட்டு போயிருப்பான். இப்போது நன்றாக மாட்டிக் கொண்டான். என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம் என்று ஆவலானேன்.
கடவுள் இருக்கிறானா?
கடவுள் இருக்கிறானா என்று உன் கேள்வியை பார்த்தால் கடவுள் ஒரு ஆண் என்று முடிவு செய்தது போல் இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் என்று பின்னால் இருக்கும் பெண்கள் கூக்கூரலிடுகிறார்கள் பார்.
நக்கல் தான் ஞானிக்கு என்று அந்த நகைச்சுவையை ரசித்தேன்.
கடவுள் இருக்கிறாளா என்று சட்டென்று மாற்றினான் அந்த சிறுவன்.
கடவுள் அவனா, அவளா, அதுவா என்று மனிதர்கள் குழம்பி நிற்பதை காண் என்றான் என்னை பார்த்து. பிறகு கூட்டத்தை பார்த்து பதில் சொல்ல தொடங்கினான்.
கடவுள் உருவமற்றவர் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அதாவது கடவுள் எப்படி இருந்தார், இல்லை இருக்கிறார் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். இன்னொரு சாரார் கடவுள் இப்படித்தான் இருந்தார், இல்லை இருக்கிறார் என்று உருவங்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் ஆதாரமாக கூறுவதெல்லாம் மத நூல்களையும் வேதங்களையும். அதாவது ஆண்டவனே வந்து அளித்ததாக கூறுப்படும் புனித நூல்களாம் இவை. இது எப்படி. கடவுள் ஒரு பிராந்தியத்தில் சென்று நான் உருவமற்றவன் என்றும் இன்னொரு பிராந்தியத்தில் நான் உருவமுள்ளவன் என்றும் கூறித்திரிகிறான். இது சரியாகப்படுகிறதா உனக்கு?
மேலும் அவன் தன்னை இவ்வாறு வணங்கவேண்டும் என்பதையும் வெவ்வேறான வகையில் கூறியிருக்கிறான்.
உலகைப்படைத்தேன் உனக்காக, உன்னை படைத்தேன் என்னை வணங்க என்று மனிதனைப்பார்த்து கடவுள் கூறுவதாக கூறுகிறார்கள். அதாவது ஒரு நிறுவனத்தின் மேலாளர் 50 பேரை வேலைக்கு சேர்த்து நீ தினமும் என் புகழ்பாடி வந்தால் உனக்கு சம்பளமும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது போல் இருக்கிறது.
சூரியன் எந்த திசையில் உதிக்கிறது என்று அந்த மாணவனைப் பார்த்து கேட்டான் இடையில்.
கிழக்கு.
தவறு.
என்ன சொல்கிறீர்கள் ஞானி.
ஆம் தம்பி. சூரியன் உதிப்பதில்லை. அது எங்கிருக்கிறதோ, அங்கே தான் இருக்கிறது. நீ எப்போது அதை காண்கிறாயோ அதை காலை என்றும் எந்த பக்கத்தில் காண்கிறாயோ அதை கிழக்கு என்றும் வரையறுத்தது மனிதன் தான். அது போல தான் கடவுளையும் அவன் வரையறுத்திருக்கிறான்.
கடவுளை மனிதன் தான் படைத்தான். அதனால் தான் இவ்வளவு குழப்பங்கள். மனிதர் நினைப்பது போல், அல்லது வரையறுத்தது போல் கடவுள் ஒரு அண்டத்தின் மறுக்கமுடியாது உண்மை, Universal Truth என்றே வைத்துக் கொண்டால், அந்த கூற்றில் எவ்வாறு இத்தனை சீர்கேடுகள், Irregularities இருக்க முடியும்.
உலகம் அனைவதும் ஒரு மொழி பேசும்படியாகவும் ஒரு மதம் பின்பற்றும் படியாகவும் செய்ய அந்த சர்வசக்தி படைத்த கடவுளால் செய்யமுடியாதா. வேண்டும் என்றே பல மதங்கள், பல மொழி வேதங்கள், படைத்து உலகத்தில் குழப்பம் விளைவிக்க அவன் என்ன விளையாட்டு பிள்ளையா. அப்படி அவன் ஏன் செய்தான் என்ற பதிலும் மனிதனிடத்தில் இல்லை, ஏன் செய்யவில்லை என்பதற்கும் பதில் இல்லை. ஆக கடவுள் எனும் கூற்ற ஒரு ஒட்டுறவு இல்லாத வலுவிழந்த கூற்றின் அடிப்படை, loosely-coupled theory என்பது நிருபணமாகிறது.
அரங்கமே அசந்து போயிருந்தது. ஒரு மாணவி எழுந்து, கடவுள் எனும் கூற்று நமக்கு தேவையா? என்று கேட்டாள்.
நான் வியப்புடன், ஞானி என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலாக இருந்தேன்.
ஆம். தேவை தான். மனிதன் தனக்கு புரியாத விஷயங்களையும் தனக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் ஏதோ ஒன்றுடன் இணைக்க கடவுள் எனும் புரியாத பிரம்மாண்ட சக்தி பெற்ற ஒரு விஷயம் தேவை தான்.
கடவுள் இல்லையென்றால் இந்த உலகை படைத்தது யார் என்று கேட்டார் ஒரு ஆசிரியர்.
மனிதன் ஏன் எல்லாவற்றிற்கும் ஒரு தோற்றம்-ஒரு மறைவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்? இதையே அடிப்படையாக வைத்து அவன் எல்லாவற்றையும் அறிய விழைகிறான். இவ்வுலகம் பல்வேறு புவியியல், வேதியல், உயிரியல் மாற்றங்களினால் உருவானது. இந்த மாற்றங்கள் நடந்துக் கொண்டே இருக்கும். அதை ஒரு உருத்தெரியாத சக்தியுடன் இணைப்பதோ, அதற்காக மதங்கள் உருவாக்குவதோ, மத சம்பிரதாயங்கள் உருவாக்குவதோ, அதற்காக சண்டையிடுவதோ, மனிதரின் முட்டாள்தனத்தை காட்டுகிறது.
கடவுளின் பெயரால் மனிதரின் மீதும் கொடுமைகளை நிறுத்து.
அறிவை தெய்வமாக்கு. அன்பை வேதமாக்கு.
கடவுள் இருக்கிறானா?
கடவுள் இருக்கிறானா என்று உன் கேள்வியை பார்த்தால் கடவுள் ஒரு ஆண் என்று முடிவு செய்தது போல் இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் என்று பின்னால் இருக்கும் பெண்கள் கூக்கூரலிடுகிறார்கள் பார்.
நக்கல் தான் ஞானிக்கு என்று அந்த நகைச்சுவையை ரசித்தேன்.
கடவுள் இருக்கிறாளா என்று சட்டென்று மாற்றினான் அந்த சிறுவன்.
கடவுள் அவனா, அவளா, அதுவா என்று மனிதர்கள் குழம்பி நிற்பதை காண் என்றான் என்னை பார்த்து. பிறகு கூட்டத்தை பார்த்து பதில் சொல்ல தொடங்கினான்.
கடவுள் உருவமற்றவர் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அதாவது கடவுள் எப்படி இருந்தார், இல்லை இருக்கிறார் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். இன்னொரு சாரார் கடவுள் இப்படித்தான் இருந்தார், இல்லை இருக்கிறார் என்று உருவங்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் ஆதாரமாக கூறுவதெல்லாம் மத நூல்களையும் வேதங்களையும். அதாவது ஆண்டவனே வந்து அளித்ததாக கூறுப்படும் புனித நூல்களாம் இவை. இது எப்படி. கடவுள் ஒரு பிராந்தியத்தில் சென்று நான் உருவமற்றவன் என்றும் இன்னொரு பிராந்தியத்தில் நான் உருவமுள்ளவன் என்றும் கூறித்திரிகிறான். இது சரியாகப்படுகிறதா உனக்கு?
மேலும் அவன் தன்னை இவ்வாறு வணங்கவேண்டும் என்பதையும் வெவ்வேறான வகையில் கூறியிருக்கிறான்.
உலகைப்படைத்தேன் உனக்காக, உன்னை படைத்தேன் என்னை வணங்க என்று மனிதனைப்பார்த்து கடவுள் கூறுவதாக கூறுகிறார்கள். அதாவது ஒரு நிறுவனத்தின் மேலாளர் 50 பேரை வேலைக்கு சேர்த்து நீ தினமும் என் புகழ்பாடி வந்தால் உனக்கு சம்பளமும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது போல் இருக்கிறது.
சூரியன் எந்த திசையில் உதிக்கிறது என்று அந்த மாணவனைப் பார்த்து கேட்டான் இடையில்.
கிழக்கு.
தவறு.
என்ன சொல்கிறீர்கள் ஞானி.
ஆம் தம்பி. சூரியன் உதிப்பதில்லை. அது எங்கிருக்கிறதோ, அங்கே தான் இருக்கிறது. நீ எப்போது அதை காண்கிறாயோ அதை காலை என்றும் எந்த பக்கத்தில் காண்கிறாயோ அதை கிழக்கு என்றும் வரையறுத்தது மனிதன் தான். அது போல தான் கடவுளையும் அவன் வரையறுத்திருக்கிறான்.
கடவுளை மனிதன் தான் படைத்தான். அதனால் தான் இவ்வளவு குழப்பங்கள். மனிதர் நினைப்பது போல், அல்லது வரையறுத்தது போல் கடவுள் ஒரு அண்டத்தின் மறுக்கமுடியாது உண்மை, Universal Truth என்றே வைத்துக் கொண்டால், அந்த கூற்றில் எவ்வாறு இத்தனை சீர்கேடுகள், Irregularities இருக்க முடியும்.
உலகம் அனைவதும் ஒரு மொழி பேசும்படியாகவும் ஒரு மதம் பின்பற்றும் படியாகவும் செய்ய அந்த சர்வசக்தி படைத்த கடவுளால் செய்யமுடியாதா. வேண்டும் என்றே பல மதங்கள், பல மொழி வேதங்கள், படைத்து உலகத்தில் குழப்பம் விளைவிக்க அவன் என்ன விளையாட்டு பிள்ளையா. அப்படி அவன் ஏன் செய்தான் என்ற பதிலும் மனிதனிடத்தில் இல்லை, ஏன் செய்யவில்லை என்பதற்கும் பதில் இல்லை. ஆக கடவுள் எனும் கூற்ற ஒரு ஒட்டுறவு இல்லாத வலுவிழந்த கூற்றின் அடிப்படை, loosely-coupled theory என்பது நிருபணமாகிறது.
அரங்கமே அசந்து போயிருந்தது. ஒரு மாணவி எழுந்து, கடவுள் எனும் கூற்று நமக்கு தேவையா? என்று கேட்டாள்.
நான் வியப்புடன், ஞானி என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலாக இருந்தேன்.
ஆம். தேவை தான். மனிதன் தனக்கு புரியாத விஷயங்களையும் தனக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் ஏதோ ஒன்றுடன் இணைக்க கடவுள் எனும் புரியாத பிரம்மாண்ட சக்தி பெற்ற ஒரு விஷயம் தேவை தான்.
கடவுள் இல்லையென்றால் இந்த உலகை படைத்தது யார் என்று கேட்டார் ஒரு ஆசிரியர்.
மனிதன் ஏன் எல்லாவற்றிற்கும் ஒரு தோற்றம்-ஒரு மறைவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்? இதையே அடிப்படையாக வைத்து அவன் எல்லாவற்றையும் அறிய விழைகிறான். இவ்வுலகம் பல்வேறு புவியியல், வேதியல், உயிரியல் மாற்றங்களினால் உருவானது. இந்த மாற்றங்கள் நடந்துக் கொண்டே இருக்கும். அதை ஒரு உருத்தெரியாத சக்தியுடன் இணைப்பதோ, அதற்காக மதங்கள் உருவாக்குவதோ, மத சம்பிரதாயங்கள் உருவாக்குவதோ, அதற்காக சண்டையிடுவதோ, மனிதரின் முட்டாள்தனத்தை காட்டுகிறது.
கடவுளின் பெயரால் மனிதரின் மீதும் கொடுமைகளை நிறுத்து.
அறிவை தெய்வமாக்கு. அன்பை வேதமாக்கு.
Subscribe to Posts [Atom]