Monday, January 08, 2007
மீண்டும் ஞானி – 8. காஷ்மீர்
மீண்டும் ஞானி – 8. காஷ்மீர்
ஐயா, இதுவரை அனைவரும் பொதுவான விஷயங்களையே கேட்டார்கள், நான் இன்றைய இந்தியாவை உலக்கும் ஒரு பிரச்சனையை பற்றி கேட்கலாமா என்று கேட்டான் ஒரு மாணவன்.
கேள் என்றான் ஞானி.
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு உண்டா?
ஆஹா, சரியான கேள்வி என்று நினைத்தேன். அனைவரும் ஆர்வமாக ஞானியை பார்த்தார்கள்.
தீர்வு உண்டு. லஞ்சைத்தை ஒழிக்க வேண்டும் என்றான் ஞானி.
என்ன என்று அந்த மாணவன் குழப்பத்துடன் கேட்டதுடன், அனைவரும் குழப்பத்துடன் அவனை பார்த்தார்கள்.
ராணுவம் தான் ஒரு நாட்டில் தலை சிறந்த ஊழல் இடமாக விளங்குகிறது. தினமும் பல கோடி செலவு செய்து எல்லைகளை பாதுகாப்பதாக சொல்வதெல்லாம் வெறும் பேத்தல். ஐந்து குண்டு வெடித்து விட்டு ஆயிரம் குண்டு வெடித்ததாக சொல்லி கணக்கு எழுதிறார்கள். இறந்த ராணுவ வீரனின் சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நம் ராணுவத்தின் முதல் நண்பன் பாகிஸ்தானின் ராணுவம் தான். இரண்டு பேரும் இத்திருட்டில் கூட்டு. இது ஒரு எல்லை பிரச்சனையோ மதப் பிரச்சனையோ இல்லை. போர் முடிந்து சமாதானம் வந்தால் பொய் கணக்கு எழுதி பணம் பார்க்க முடியுமா.
எப்படி ஒரு சாதாரண குடி மகன் எல்லையில் எத்தனை குண்டு வெடித்தது என்று கணக்கு பார்க்க முடியாதோ அது போலத்தான் வரி கட்டும் நீங்கள் அரசாங்கம் செலவு செய்வதில் எத்தனை உண்மை எத்தனை பொய் என்று அறியமுடியாமல் கோடான கோடி பணத்தை தினமும் இழக்கின்றீர்கள்.
கார்கில் என்று ஒன்று வராவிட்டால் வருடாவருடம் பாதுக்காப்புகாக நிதி திட்டத்திலிருந்து அதிக பணம் கேட்க முடியுமா? போர்கள் குடிமக்களை பயத்துடன் இருக்க உதவுகின்றன. போர்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க ஒவ்வொரு நாட்டு அரசியல்வாதிகளும் செய்யும் நாடகம்.
Wars are nothing but well rehearsed dramas by the politicans and the army to ensure that people remain scared, and are always under pressure of wars. As security budgets are never questioned, people in-between end-up in making hell a lot of money.
சுருங்கச் சொன்னால் லஞ்ச ஊழலை ஒழித்தால் காஷ்மீர் பிரச்சனை தீரும். இரண்டு நாடுகளிலும் அமைதி நிலவும். சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கும் மக்களுக்கு சோறு கிடைக்கும். மலம் கழிக்கும் இடங்களை கூட வெள்ளியாலும் தங்கத்தாலும் செய்து வைக்க எண்ணும் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கொட்டம் அடங்கும். அடங்க வேண்டும்.
கேள் என்றான் ஞானி.
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு உண்டா?
ஆஹா, சரியான கேள்வி என்று நினைத்தேன். அனைவரும் ஆர்வமாக ஞானியை பார்த்தார்கள்.
தீர்வு உண்டு. லஞ்சைத்தை ஒழிக்க வேண்டும் என்றான் ஞானி.
என்ன என்று அந்த மாணவன் குழப்பத்துடன் கேட்டதுடன், அனைவரும் குழப்பத்துடன் அவனை பார்த்தார்கள்.
ராணுவம் தான் ஒரு நாட்டில் தலை சிறந்த ஊழல் இடமாக விளங்குகிறது. தினமும் பல கோடி செலவு செய்து எல்லைகளை பாதுகாப்பதாக சொல்வதெல்லாம் வெறும் பேத்தல். ஐந்து குண்டு வெடித்து விட்டு ஆயிரம் குண்டு வெடித்ததாக சொல்லி கணக்கு எழுதிறார்கள். இறந்த ராணுவ வீரனின் சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நம் ராணுவத்தின் முதல் நண்பன் பாகிஸ்தானின் ராணுவம் தான். இரண்டு பேரும் இத்திருட்டில் கூட்டு. இது ஒரு எல்லை பிரச்சனையோ மதப் பிரச்சனையோ இல்லை. போர் முடிந்து சமாதானம் வந்தால் பொய் கணக்கு எழுதி பணம் பார்க்க முடியுமா.
எப்படி ஒரு சாதாரண குடி மகன் எல்லையில் எத்தனை குண்டு வெடித்தது என்று கணக்கு பார்க்க முடியாதோ அது போலத்தான் வரி கட்டும் நீங்கள் அரசாங்கம் செலவு செய்வதில் எத்தனை உண்மை எத்தனை பொய் என்று அறியமுடியாமல் கோடான கோடி பணத்தை தினமும் இழக்கின்றீர்கள்.
கார்கில் என்று ஒன்று வராவிட்டால் வருடாவருடம் பாதுக்காப்புகாக நிதி திட்டத்திலிருந்து அதிக பணம் கேட்க முடியுமா? போர்கள் குடிமக்களை பயத்துடன் இருக்க உதவுகின்றன. போர்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க ஒவ்வொரு நாட்டு அரசியல்வாதிகளும் செய்யும் நாடகம்.
Wars are nothing but well rehearsed dramas by the politicans and the army to ensure that people remain scared, and are always under pressure of wars. As security budgets are never questioned, people in-between end-up in making hell a lot of money.
சுருங்கச் சொன்னால் லஞ்ச ஊழலை ஒழித்தால் காஷ்மீர் பிரச்சனை தீரும். இரண்டு நாடுகளிலும் அமைதி நிலவும். சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கும் மக்களுக்கு சோறு கிடைக்கும். மலம் கழிக்கும் இடங்களை கூட வெள்ளியாலும் தங்கத்தாலும் செய்து வைக்க எண்ணும் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கொட்டம் அடங்கும். அடங்க வேண்டும்.
Subscribe to Posts [Atom]